தேசிய செய்திகள்

5 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் - மராட்டிய மந்திரி ஆதித்யா தாக்கரே

5 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மராட்டிய மந்திரி ஆதித்யா தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெளியாகின. இவற்றில் பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக முன்னணியில் உள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மராட்டிய மாநில சுற்றுச்சூழல் மந்திரி ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

5 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நாங்கள் முடிவுகளை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறோம். உ.பி.யில் எங்கள் கட்சி அடித்தளத்தை விரிவுபடுத்துவோம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல பலன்களைக் காண்போம். மகாவிகாஸ் அகாடியில் முடிவுகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு