தேசிய செய்திகள்

இந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வழங்கியது அமெரிக்கா

முதற்கட்டமாக அதி நவீன 4 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்கா இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவிடம் இருந்து 22 அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு, 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதற்கட்டமாக 4 அப்பாச்சி அதிநவீன ஹெலிகாப்டர்களை அமெரிக்கா, இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது.

ஒவ்வொரு அப்பாச்சி ஹெலிகாப்டரின் விலை ரூ.4,168 கோடியாகும். உலகின் அதிநவீன ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்றாகும். அடுத்த வாரத்தில் மீண்டும் 4 ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படும். 2020-ம் ஆண்டில் மீதமுள்ள அனைத்து ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும் என்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்