தேசிய செய்திகள்

இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு - நீல எச்சரிக்கை விடுப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

இடுக்கி அணையின் முழு கொள்ளளவு 2 ஆயிரத்து 403 அடியாகும். இந்த நிலையில் தற்போதைய நீர்மட்டம் 2 ஆயிரத்து 390 புள்ளி 86 அடியாக உயரந்துள்ளது.

இதன் காரணமாக அங்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதி மக்கள் விழிப்புடன் இருக்கவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.