தேசிய செய்திகள்

குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது வழக்கு விசாரணை ஏன் 9 மணிக்கு தொடங்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட் நீதிபதி

குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது வழக்கு விசாரணை ஏன் 9 மணிக்கு தொடங்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி

நாட்டில் குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை ஏன் காலை 9 மணிக்கு தொடங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி லலித் கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி லலித் தலையிலான அமர்வின் விசாரணை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.விசாரணையின் போது பேசிய நீதிபதி லலித், சுப்ரீம் கோர்ட்டில் காலை 9 மணிக்கு விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஏன் 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வரக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வழக்கமாக காலை 10.30 மணிக்கு கூடும் சுப்ரீம் கோர்ட் இன்று ஒரு மணி நேரம் முன்னதாக 9.30 மணிக்கு கூடியது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை