தேசிய செய்திகள்

சன்னி வாரியம் ஏற்காவிட்டால் 5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு தாருங்கள் - ஷியா வக்பு வாரியம் கேட்கிறது

சன்னி வாரியம் ஏற்காவிட்டால் 5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு தாருங்கள் என ஷியா வக்பு வாரியம் கேட்டுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

அயோத்தியில் மத்திய அரசு ஒதுக்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சன்னி வக்பு வாரியம் இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில், இவ்வழக்கின் மனுதாரர்களில் ஒருதரப்பான ஷியா வக்பு வாரியத்தின் தலைவர் வசீம் ரிஸ்வி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அயோத்தி வழக்கு தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்க வேண்டும். சீராய்வு மனு தாக்கல் செய்வது, சுமுக சூழ்நிலையை கெடுத்து விடும். மசூதி கட்ட மத்திய அரசு ஒதுக்கும் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்க மறுத்து விட்டால், அதை எங்களுக்கு தர வேண்டும். இதற்காக நாங்கள் கோர்ட்டை அணுக மாட்டோம். மத்திய அரசிடம்தான் கேட்போம். அந்த இடத்தில் மசூதிக்கு பதிலாக, அனைத்து மதத்தினரும் பலனடையும் வகையில் ஆஸ்பத்திரி கட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்