தேசிய செய்திகள்

சிக்கமகளூருவில், இருவேறு இடங்களில் விபத்துகளில் சிக்கி 2 வாலிபர்கள் பலி

சிக்கமகளூருவில், இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா சன்னாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரா (வயது 28). இவர் அதே பகுதியில் உள்ள சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி ஒன்று, ராகவேந்திரா சென்ற கார் மீது மோதியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி ராகவேந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஜ்ஜாம்புரா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல சிக்கமகளூரு (மாவட்டம்) கடூர் தேசிய நெடுஞ்சாலையில் முகமது சாரிக் (38) என்பவர், தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முகமது சாரிக், சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கடூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த முகமதுவின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்