தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி

மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டம் மகாதெப்பூர் கிராமத்தில் பனை ஓலைகள், தார்ப்பாய், மரக்கிளைகள் மூலம் கூடாரம் அமைத்து பனைத்தொழிலாளர் குடும்பத்தினர் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த கூடாரத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென கூடாரம் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ பரவி தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீதும் எரியத்தொடங்கியது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அனைவரும் அலறி துடித்தனர். இருப்பினும், 4 குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்