தேசிய செய்திகள்

ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது- பிரதமர் மோடி பேச்சு

பாதுகாப்பான உலகை உருவாக்க அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். சர்வதேச அளவில் போலீஸ் துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இன்டர்போல் அமைப்பில் மொத்தம் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இன்டர்போலின் 90வது பொதுச்சபை அக்டோபர் 18 முதல் 21 வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 195 இன்டர்போல் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மந்திரிகள், நாடுகளின் போலீஸ் அமைப்பின் தலைவர்கள், தேசிய மத்திய பணியகங்களின் தலைவர்கள் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இன்டர்போல் பொதுச்சபை கூட்டத்தை தொடங்கி வைத்து பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில், இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. சட்ட கட்டமைப்பில் வேறுபாடுகள் இருந்தபோதிலும்கடந்த 99 ஆண்டுகளில், இன்டர்போல் 195 நாடுகளில் உள்ள போலீஸ் அமைப்புகளை உலகளவில் இணைத்துள்ளது.

உலகத்தை சிறந்த இடமாக மாற்ற உலகளாவிய ஒத்துழைப்பு மிக அவசியம். ஐ.நா அமைதிப் படைக்கு அதிக பங்களிப்பை அளிக்கும் நாடு இந்தியா. அதுமட்டுமல்ல, காலநிலை இலக்குகள் முதல் கொரோனா தடுப்பூசி வரை உலகிற்கு ஏற்படும் எந்தவொரு நெருக்கடிக்கும் தீர்வு காண்பதற்கான விருப்பத்தை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பான உலகை உருவாக்க அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்