Image Courtesy: PTI 
தேசிய செய்திகள்

கிழக்கு லடாக் விவகாரம்: 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல்

கிழக்கு லடாக் விவகாரத்தில், 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல் வழங்கி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

பதற்றத்தை தணிக்க இருதரப்பு ராணுவமும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 15-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் இருதரப்பு இடையிலான ராணுவ ரீதியிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க இந்தியா மற்றும் சீனா ஒப்புக்கொண்டுள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து