தேசிய செய்திகள்

தடுப்பூசி சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை

தடுப்பூசி சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேசி வருவதாக வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளீதரன் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறி இருப்பதாவது:-

தற்போது தடுப்பூசி பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை. கொரோனா தொற்றால் சாதாரணமான வெளிநாட்டுப்பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தற்போது பயணத்தில் பலதரப்பு நெறிமுறைகள் இல்லை.

பல நாடுகள் கொரோனா நெகட்டிவ் என்னும் சான்றிதழ்களை கேட்கின்றன. தடுப்பூசி சான்றிதழ்களுக்கு பரஸ்பரம் அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு