தேசிய செய்திகள்

'இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு தயாராகும்' - மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ்

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் 762 பில்லியன் டாலர்களை எட்டியது என அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு தயாராகும் என மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"பிரதமர் மோடி 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது மிகவும் துணிச்சலான நடவடிக்கை ஆகும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இது போன்ற திட்டங்கள்தான் இந்தியாவின் வெற்றிகரமான ஏற்றுமதி வர்த்தகத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் 762 பில்லியன் டாலர்களை எட்டியது. இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு தயாராகிவிடும்."

இவ்வாறு மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்