தேசிய செய்திகள்

இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தினத்தந்தி

டெல்லி,

இந்தியா-சீனா இடையிலான 22-வது சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இருதினங்கள் நடைபெறும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பிரதிநிதிகள் கூட்டம் சீனாவில் நடைபெற்றது.

நாளை நடைபெறும் கூட்டத்தில் இந்திய தரப்பில் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் பிரதிநிதிகளாகப் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடத்திய அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புக்கு பின்னர் இருநாட்டுப் பிரதிநிதிகள் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்