தேசிய செய்திகள்

ராணுவ போலீசில் முதல் கட்டமாக 800 பெண்களை சேர்க்க முடிவு

ராணுவ போலீசில் பெண்களை சேர்ப்பதற்கான திட்டத்தில் இராணுவம் இறுதி முடிவு செய்துள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்

புதுடடெல்லி:


ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் அஷ்வானி குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு வருடமும் ராணுவ போலீசில் பெண்களை சேர்க்க திட்டம் மிடப்பட்டு உள்ளது. ராணுவ போலீசில் முதல் கட்டமாக 800 பெண்களை சேர்க்க முடிவு செய்யபட்டு உள்ளது. இது பாலின தடைகளை உடைப்பதில் ஒரு பெரிய படியாக கருதப்படும் திட்டம் ஆகும்.

பாலியல் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு இராணுவப் போலீஸ் பிரிவில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான முடிவு செய்யபட்டு உள்ளதாக லெப்டினென்ட் ஜெனரல் குமார் தெரிவித்தார்.

தற்போது, ராணூவத்தில் பெண்கள் மருத்துவம் சட்டம், கல்வி, சிக்னல்கள் மற்றும் இயந்திரம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்