தேசிய செய்திகள்

இந்திய - வங்கதேச வீரர்கள் இனிப்புகள் பரிமாறி தீபாவளி கொண்டாட்டம்..!

எல்லையில் இனிப்புகளை பரிமாறி ராணுவ வீரர்கள் தீபாவளியை கொண்டாடினர்.

தினத்தந்தி

புல்பாரி,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கெண்டாட்டம் களை கட்டியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை நாட்டு மக்கள் கொண்டாடி வரும் நிலையில், எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய - வங்கதேச எல்லையான புல்பாரியில் தீபாவளி கொண்டாடப்பட்டது. வங்கதேச வீரர்களும், இந்திய வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறி கொண்டதுடன், தீபாவளி வாழ்த்துக்களை கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்