தேசிய செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய நிபுணர் குழு பரிந்துரை

இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசியை பரிந்துரை செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இவற்றில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு உள்நாட்டு உற்பத்தி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியிருந்தது.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முதல் டோஸ், 2வது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின், மருந்து ஆலோசனைக்கான நிபுணர் குழு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்