தேசிய செய்திகள்

21 வயதிலே போதைக்கு அடிமையாகும் இந்திய இளைஞர்கள்

21 வயதிலே போதைக்கு இந்திய இளைஞர்கள் அடிமையாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

உலக அளவில் அதிக மது அருந்துவோர் பட்டியலில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. மும்பையில் அமைந்துள்ள புனித சேவியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினர். மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 16 முதல் 21 வயதுக்குட்பட்ட 1,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் 75 சதவீத இளைஞர்கள் 21 வயதை அடைவதற்கு முன்பே மது அருந்தியதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. மேலும் 47 சதவீதம் பேர் சிகரெட் புகைக்க முயற்சிப்பதாகவும், 20 சதவீதம் பேர் வேறு போதைப்பொருளை பயன்படுத்துவதாகவும் ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஏறக்குறைய 88 சதவீத இளைஞர்கள் 16 முதல் 18 வயதுக்குள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு