புதுடெல்லி,
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதா
வது:-
ஐரோப்பிய பிராந்தியமான பிரான்ஸ் வழியாகப் பயணிக்கும் இந்தியர்களுக்கான விசா இல்லாத பயணத்தை பிரெஞ்சு அரசாங்கம் இப்போது செயல்படுத்தியுள்ளது.
இந்த முடிவு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோரின் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த ஆண்டு பிப்ரவரியில் மும்பையில் நடந்த சந்திப்பின் போது பிரதமர் மற்றும் அதிபர் மக்ரோன் இடையே இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான போக்குவரத்து விசா தேவையை நீக்குவது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.