தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் தனியார் ரெயில் ரெயில்வே கட்டணச் சட்டத்தை மீறி அதிக கட்டணம் வசூல்

இந்தியாவின் முதல் தனியார் ரெயில் ரெயில்வே கட்டணச் சட்டத்தை மீறி அதிக கட்டணம் வசூலிக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி

இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) நாட்டின் முதல் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை டெல்லி-லக்னோ பாதையில் அக்டோபர் 4-ந்தேதி முதல் தொடங்கியது.

இந்த சேவை இந்திய ரெயில்வேயில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும் என்றும் தொடர்ந்து தனியார்கள் மூலம் நாட்டில் 24 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவின் முதல் தனியார் ரெயில் சேவை (1989 ஆம் ஆண்டு) ரெயில்வே சட்டத்தை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக கட்டணத்தை தனியார் நிறுவனம் வசூலிக்கிறது. ஆனால் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்றும் ஐ.ஆர்.சி.டி.சிக்கு இல்லை என்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அக்டோபர் 4 ஆம் தேதி லக்னோ-டெல்லி-லக்னோ ரெயில் பாதையில் தொடங்கபட்ட மிகவும் பிரபலமான தனியார் ரெயில் சேவை, தற்போதுள்ள சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் அதே பாதையில் உள்ள பிற ரெயில்களை விட அதிக கட்டணம் வசூலிக்கிறது.

மித அதிவேக தேஜாஸ் எக்ஸ்பிரஸின் முழுமையான குளிரூட்டப்பட்ட ரேக்குகளைப் பயன்படுத்தி இரண்டு பிரீமியம் ரெயில்களை இயக்கும் பணியை இந்திய ரயில்வே துறை அதன் வணிக சுற்றுலா மற்றும் கேட்டரிங் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சிக்கு ஒப்படைத்தது. இரண்டாவது தனியார் ரயில் விரைவில் மும்பை-அகமதாபாத்-மும்பை துறையில் இயக்கப்படுகிறது.

கார்ப்பரேட் நிறுவனம் இயக்கும் முதல் ரெயில் பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் வசதிகள் மற்றும் போர்டு சேவை உலகளாவிய தரத்துடன் உள்ளது. ஆனால் மூத்த ரயில்வே அதிகாரிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணமானது ரெயில்வே சட்டத்தை மீறுவதை கண்டறிந்து உள்ளனர். கட்டணங்கள் அதிகம் மற்றும் இயங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

டெல்லி-லக்னோ தனியார் ரெயில் எண் 82502, ஐ.ஆர்.சி.டி.சி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 511 கி.மீ தூரத்தை காசியாபாத் (இரண்டு நிமிடங்கள்) மற்றும் கான்பூர் சென்ட்ரல் (ஐந்து நிமிடங்கள்) நிறுத்தங்களுடன் 6 மணி 30 நிமிடங்கள் பயண நேரம் ஆகும்.

இந்த ரெயில் ஏசி எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு ரூ.2,450 மற்றும் ஜிஎஸ்டி மற்றும் கேட்டரிங் உள்ளிட்ட ஏசி சேர் காருக்கு ரூ.1,565 வசூலிக்கிறது.

மறுபுறம், ரெயில் எண் 12004 டெல்லி-லக்னோ சதாப்தி எக்ஸ்பிரஸ் 6 மணி 35 நிமிடங்கள் பயண நேரம் ஆகும், ஆனால் ஐந்து நிறுத்தங்களுடன் - காசியாபாத், அலிகார், டண்ட்லா, எட்டாவா (தலா இரண்டு நிமிடங்கள்) மற்றும் கான்பூர் சென்ட்ரல் (ஐந்து நிமிடங்கள்). இந்த ரெயில் ஏசி எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு ரூ.1855 மற்றும் ஜிஎஸ்டி, சூப்பர் ஃபாஸ்ட் மற்றும் முன்பதிவு கட்டணம் உள்ளிட்ட ஏசி சேர் காருக்கு ரூ.1,165 வசூலிக்கிறது.

அதே செக்டாரில் சுஹைல்தேவ் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் கரிப் ராத் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிற்கான ஏசி சேர் காருக்கான கட்டணம் முறையே ரூ .645 மற்றும் ரூ. 480 ஆகும்.

ஐ.ஆர்.சி.டி.சிக்கு கட்டணத்தை நிர்ணயிக்க அதிகாரம் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பயணிகள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டணங்கள் மத்திய அரசால் தீர்மானிக்கப்படும் என்று ரயில்வே சட்டம் தெளிவாகக் கூறியுள்ளது.

மேலும் 150 ரெயில்களை தனியார் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன் பின்னணியில் இந்த பிரச்சினை உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

மேலும் சில தனியார் இயக்கும் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அவைகளில் விரைவில் தனியார் சேவை தொடங்கும். முதல் முறையாக தொடங்கப்பட்ட ரெயில் சேவையிலேயே அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் பின்னர் தொடர்ந்து இயக்கப்படும் தனியார் சேவைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் வாய்ப்பு உள்ளது.

டெல்லி-மும்பை, டெல்லி-லக்னோ, டெல்லி-ஜம்மு / கத்ரா, டெல்லி-ஹவுரா, செகந்திராபாத்-ஹைதராபாத், செகந்திராபாத்-டெல்லி, டெல்லி-சென்னை, மும்பை-சென்னை, ஹவுரா-சென்னை மற்றும் ஹவுரா-மும்பை போன்ற நீண்ட தூரம் மற்றும் ஒரே இரவில் பயணம் செய்வதற்கு மேற்கண்ட வழித்தடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

மும்பை-அகமதபாத், மும்பை-புனே, மும்பை-அவுரங்காபாத், மும்பை-மட்கான், டெல்லி-சண்டிகர் / அமிர்தசரஸ், டெல்லி-ஜெய்ப்பூர் / அஜ்மீர், ஹவுரா-பூரி, ஹவுரா-டாடாநகர், ஹவுரா-பாட்னா, செகந்திராபாத்-விஜயவாடா, சென்னை-பெங்களூரு சென்னை-கோவை, சென்னை-மதுரை மற்றும் எர்ணாகுளம்-திருவனந்தபுரம்.

இவை தவிர, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் செகந்திராபாத் போன்ற முக்கிய நகரங்களில் புறநகர் ரெயில் சேவைகளை இயக்க தனியார் ஆபரேட்டர்களை சேர்க்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. 2023-ம் ஆண்டு இந்த வழித்தடங்களில் தனியார் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு