தேசிய செய்திகள்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அபியாஸ்' ஏவுகணை 4 முறை வெற்றிகரமாக சோதனை - டி.ஆர்.டி.ஓ. தகவல்

‘அபியாஸ்’ ஏவுகணை எதிரிகளின் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் அதிவேக வான் இலக்கு ஏவுகணை 'அபியாஸ்', கடந்த ஜனவரி 30-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை 4 முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) தெரிவித்துள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அபியாஸ்' ஏவுகணை எதிரிகளின் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையின் சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து