தேசிய செய்திகள்

போக்குவரத்து சிக்னலில் நடனமாடிய பெண் மீது நடவடிக்கை எடுக்க மந்திரி உத்தரவு

மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னலில் நடனமாடிய பெண் மீது நடவடிக்கை எடுக்க மாநில மந்திரி நரோத்தம் மிஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

இந்தூர்,

மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னலின் போது நடனமாடிய பெண் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தூரில், போக்குவரத்து சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்ததால் வாகனங்கள் காத்திருக்க, திடீரென வந்த பெண் ஒருவர் சாலையின் நடுவே நடனமாடினார்.

வாகனங்களுக்கு மத்தியில் அந்த பெண் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து போக்குவரத்தில் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையில் அவர் ஷ்ரேயா கோல்ரா என்பதும், இன்ஸ்டகிராம் பதிவுக்காக சிக்னலில் நடனமாடிதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில உள்துறை மந்திரி நரோத்தம் மிஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை