மும்பை
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி முகர்ஜி (43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு பைகுல்லா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அவருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் பைகுல்லாவில் உள்ள ஜெஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயக்க நிலையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.