தேசிய செய்திகள்

குஜராத்தில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல் பெண் உள்பட 4 பேர் கைது

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சந்கேடா என்ற இடத்தில் மர்ம நபர்கள் சிலர் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தினத்தந்தி

ஆமதாபாத்,

சந்கேடா என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே கார் ஒன்று சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்தது. போலீசார் அங்கு சென்று அந்த காரை சோதனை செய்தபோது அதில் செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 2 ஆயிரத்து 800, ரூ.500 நோட்டுகள் மற்றும் 3 ஆயிரத்து 599 ரூ.1000 நோட்டுகள் என ரூ.99 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பிலான செல்லாத நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது