தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ் ஆபத்தானதா? - நிபுணர் கருத்து

உருமாறிய கொரோனா வைரஸ் ஆபத்தானதா என நிபுணர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் புதிய இரட்டை உருமாறிய (பிறழ்வு திரிபு) வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மராட்டியத்தில் இது அதிகளவில் காணப்படுகிறது. இந்த புதிய வைரஸ்கள், நமது நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிப்பதுடன், நோயின் பாதிப்பையும் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகின.

அதே நேரத்தில் இந்த வைரஸ் ஆபத்தானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் அகர்வால் கூறுகையில், நாங்கள் அறிந்தவரையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வைரசோ அல்லது இந்தியாவில் கண்டறியப்பட்ட இந்த இரட்டை பிறழ்வு திரிபு வைரசோ தீவிரமான பாதிப்பையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்துபவை அல்ல.

இங்கிலாந்து வைரசும், இந்தியாவின் புதிய வைரசும் வேகமாக பரவக்கூடியவையாக இருக்கலாம். ஆனால் இந்திய வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்பது நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்