கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? - வெளியான அதிர்ச்சி தகவல்

கேரளாவில் கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 582 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் போக்சோ சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் கேரளாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு 1,002 போக்சோ வழக்குகள் பதிவாகின.

இதன் எண்ணிக்கை சுமார் 4 மடங்காக அதிகரித்து கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 582 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் 5 ஆயிரத்து இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இச்சம்பவங்கள் வீடுகள், பள்ளிகள், உணவகங்கள், நண்பர்களின் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அரங்கேறி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது