தேசிய செய்திகள்

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன

மகனுக்கு ஆதியா மற்றும் கிருஷ்னா என பெயர் சூட்டியிருப்பதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மும்பை,

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனந்த் பிரமல் என்ற தொழில் அதிபரை இஷா அம்பானி கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு மகன் - மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.மகனுக்கு ஆதியா மற்றும் கிருஷ்னா என பெயர் சூட்டியிருப்பதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அம்பானி குடும்பத்தினர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், எங்கள் மகள் இஷா- ஆனந்த் தம்பதிக்கு இன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆதியா என்ற பெண் குழந்தையும் கிருஷ்ணா என்ற மகனும் பிறந்து இருக்கிறான். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாத்தா ஆகியிருக்கும் முகேஷ் அம்பானி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.