தேசிய செய்திகள்

ஐ.எஸ். பயங்கரவாதம்: கேரளாவில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி ரெய்டு

ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பாக கேரளாவில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

தினத்தந்தி

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் இருந்து 2016-ம் ஆண்டு 20-க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தது தெரியவந்தது. சிரியாவிற்கும் சென்றனர் என கூறப்பட்டது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் தாக்குதலை அடுத்து, தென்னிந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் தீவிரம் காட்டுகிறது.

இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பாக கேரளாவில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

காசர்கோடு ஐ.எஸ். மாடல் தொடர்பாக மூன்று சந்தேகத்திற்கு இடமானவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். கேரளாவின் காசர்கோடு மற்றும் பாலக்காடு பகுதியில் சோதனை நடந்துள்ளது. மூன்று பேரிடம் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையையும் மேற்கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்