தேசிய செய்திகள்

அயோத்தி பிரச்சினையில் ஒருமித்த கருத்தை எட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல

மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பய்யாஜி ஜோஷி கலந்து கொண்டார்.

தினத்தந்தி

நாக்பூர்,

ஆலோசனைக்கூட்டம் முடிந்ததும் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பய்யாஜி ஜோஷி கூறியதாவது:

அயோத்தி பிரச்சினையில் ஒரு மித்த கருத்தை எட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனாலும் அங்கு ராமர் கோவில் கட்டுவது உறுதி. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என நம்புகிறோம். தீர்ப்பு வந்த பிறகு கோவில் கட்டும் பணிகள் தொடங்கும்.

அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண ரவிசங்கர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து