தேசிய செய்திகள்

சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #NirmalaSitharaman #Sukhoi-30

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாரமன், ராணுவம், விமானப்படை, கடற்படையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். ஐஎன்எஸ் விக்ரமாதித்தியா போர்க் கப்பலில் அண்மையில் பயணம் செய்தார். இதை தொடர்ந்து, இந்திய விமானப்படையின் சுகோய் 30 ரக ஜெட் விமானத்தில் இன்று பயணம் செய்தார்.

விமானிக்கு அடுத்த இடத்தில் அமர்ந்து, விமானி உடையணிந்து நிர்மலா சீதாராமன் பயணம் செய்தார். ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து 30 நிமிடங்கள் வரை அவர் பயணம் செய்தார். இதன் மூலம் சூப்பர்சோனிக் ஜெட் போர் விமானத்தில் பயணம் செய்த முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

சுகோய் போர் விமானத்தில் பறந்தது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது. அவசர காலத்தில் பாதுகாப்பு துறையின் தயார் நிலையை இதன் மூலம் அறிய முடிந்தது இவ்வாறு அவர் தெரிவித்தார். #NirmalaSitharaman #Sukhoi-30

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்