தேசிய செய்திகள்

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கொரோனா தொற்றால் பாதிப்பு

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்திய அமைச்சர்கள், மாநில முதல் மந்திரிகள், மந்திரிகள் என உயர் பதவியில் உள்ளவர்களும் தப்பவில்லை.

அந்த வகையில்மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் கஜேந்திர சிங் ஷெகாவத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- எனக்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த காலங்களில் என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்