தேசிய செய்திகள்

9 மாத குழந்தை உள்பட 3 பேர் சுட்டுக்கொலை பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்

9 மாத குழந்தை உள்பட 3 பேர் சுட்டுக்கொலை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் செயல்பட்டு வருவதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கஜோரி, போஜ் மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் இடங்களில் புகுந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் இராணுவத்தினர் நவீனரக துப்பாக்கிகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பூஞ்ச் மாவட்டத்தில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே உட்பாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியும் நடந்து வருகிறது.இதனால், இந்திய இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்ற நிலையில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?