தேசிய செய்திகள்

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

முதல் மந்திரிக்கு, எந்த பண மோசடி வழக்கில் விளக்கம் அளிக்க கேட்கப்பட்டு உள்ளது என்பது பற்றி உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தினத்தந்தி

புதுடெல்லி, 

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்ந் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல்மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சார்பில் மோசடி வழக்கு ஒன்றில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவர் அடுத்த வாரம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் மந்திரிக்கு, எந்த பண மோசடி வழக்கில் விளக்கம் அளிக்க கேட்கப்பட்டு உள்ளது என்பது பற்றி உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர், சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் தொடர்ச்சியாக முதல்-மந்திரிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை