தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

பூஞ்ச்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவம், பூஞ்ச் செக்டாரில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. நேற்று பின்னிரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இரண்டு மணி நேரம் இந்த துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் 226 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஆனால், நடப்பாண்டு தற்போது வரை 503 முறை எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...