தேசிய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மகர் துவார் நுழைவு வாயிலில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேட்டி எடுப்பது வழக்கம். ஆனால், அப்பகுதியில் இன்று காலை செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் முன்பிருந்த பல்வேறு அனுமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில், பல்வேறு நிறுவனங்களின் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை உடனடியாக நீக்க கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு