தேசிய செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: முதல் மந்திரி சித்தராமையா வேட்பு மனு தாக்கல்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிய உள்ளது. முதல் மந்திரி சித்தராமையா பதாமி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன்(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.

இந்த தேர்தலில் முதல்-மந்திரி சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்டார். இந்த நிலையில் சித்தராமையா பாதாமி தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இன்று இரவு பாதாமியில் தங்கும் சித்தராமையா நாளை பாதாமி தொகுதியில் பிரசாரம் நடத்துவார் என்று தெரிகிறது. முதல் மந்திரி சித்தராமையா போட்டியிடுவதால் பாதாமி தொகுதி கர்நாடகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை