தேசிய செய்திகள்

மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் மீண்டும் பாதயாத்திரை...!

மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் மீண்டும் பாதயாத்திரை தொடங்க உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ராமநகரில் இருந்து பெங்களூருவை நோக்கி அம்மாநில காங்கிரஸ் பாதயாத்திரையை தொடங்கியது. கொரோனா காரணமாகவும், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்தும் ஜனவரி 12-ந் தேதியே பாதயாத்திரையை காங்கிரஸ் நிறுத்தி இருந்தது.

கொரோனா பரவல் குறைந்ததும் மீண்டும் பாதயாத்திரை தொடங்கப்படும் என்று கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்திருந்தார்.

அதன்படி, வருகிற 27-ந் தேதி மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி மீண்டும் பாதயாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை ராமநகரில் வருகிற 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி பெங்களூரு பசவனகுடியை வந்தடைய உள்ளது. அன்றைய தினம் பசவனகுடியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்