தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் 435 புலிகள் உள்ளன-மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே பேட்டி

கர்நாடக வனம்-சுற்றுச்சூழல் துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, பெங்களூருவில் நேற்று புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தினத்தந்தி

பெங்களூரு:-

தேசிய புலிகள் ஆணைய வழிகாட்டுதல்படி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் யானை மற்றும் இதர விலங்குகளின் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அதிகமாக உள்ளது. புலிகளை காப்பதில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்டது. மாநிலத்தில் நாகரஒலே, பந்திப்பூர், பிளிகிரிரங்கணபெட்டா உள்பட 17 வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. அனைத்து வனப்பகுதிகளிலும் மொத்தம் 5 ஆயிரத்து 399 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் 66 லட்சம் வனவிலங்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில் கர்நாடகத்தில் 404 புலிகள் இருப்பது தெரியவந்தது. இதை வனவிலங்குகள் புள்ளி விவரங்கள்படி அதன் எண்ணிக்கை 573 வரை இருக்கும் என்று சொல்லப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 435 புலிகள் இருப்பது தெரியவந்தது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். நமது நாட்டில் காடுகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி காரணம்.

இவ்வாறு ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து