தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 3 மகள்களை கொன்று கர்நாடக பெண் தற்கொலை

மராட்டியத்தில் 3 மகள்களை கொன்று கர்நாடக பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா கோஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுனிதா (வயது 35). இவரது மகள்கள் அம்ரிதா, அங்கிதா, ஐஸ்வர்யா. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுனிதா தனது மகள்களுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். சுனிதாவையும், அவரது மகள்களையும் கணவரும், குடும்பத்தினரும் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.

ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் பில்லூர் கிராமத்தில் உள்ள குளத்தில் நேற்று சுனிதாவும், 3 மகள்களும் பிணமாக மிதந்தனர். இதுபற்றி அறிந்ததும் ஜட்டா போலீசார் அங்கு சென்று 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக 3 மகள்களுடன் குளத்தில் குதித்து சுனிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்