தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்ட்டர்: அடையாளம் தெரியாத 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

தினத்தந்தி

சோப்பூர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது. இதுபற்றி காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், சோப்பூரில் என்கவுண்ட்டர் தொடங்கியுள்ளது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேடுதல் வேட்டை நிறைவடைந்து உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்