கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

கேரளா நடிகை பாலியல் வழக்கு: கோர்ட்டு அதிரடி உத்தரவு

பாலியல் துன்புறுத்தல் வழக்கை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக கேரள நடிகை தாக்கல் செய்த மனுவுக்கு கோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

கோழிக்கூடு,

பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தெடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுதெடர்பான விசாரணை அறிக்கையை வரும் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே நடிகை தரப்பு கேரள அரசு மற்றும் விசாரணை நீதிபதிக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நடிகர் திலீப்புக்கும், ஆளுங்கட்சியை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளதாகவும், விசாரணை நீதிபதியின் பல நடவடிக்கைகளும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணைக்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்றும், நடிகையின் மனுவுக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்