தேசிய செய்திகள்

கேரளா: இன்ஸ்டாகிராம் காதலருடன் பிரிவு; நெட்டிசன்கள் கேலியால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை

கேரளாவில் மகளின் காதல் பற்றி தெரிய வந்த பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறினர்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் வசித்து வந்த 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர். இவருடைய காதலரும் இன்ஸ்டாகிராமில் பிரபலம் வாய்ந்தவர். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் காதலருடன் மாணவிக்கு பிரிவு ஏற்பட்டது.

இதன்பின்னர், மாணவியின் முன்னாள் காதலரின் நண்பர்கள் மாணவியை கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால், அந்த மாணவி மன உளைச்சலில் இருந்துள்ளார். மாணவியின் காதல் பற்றி அவரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. படிப்பில் கவனம் செலுத்தும்படி மாணவியிடம் அவருடைய பெற்றோர் அறிவுரை கூறி வந்தனர். ஆனால், மாணவியோ அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

இந்த நிலையில், கடந்த வாரம் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அவர் உயிரிழந்து விட்டார். இன்ஸ்டாகிராமில் பிரபலம் அடைந்த மாணவி, அதே இன்ஸ்டாகிராமில் பிரபல நபரை காதலித்து, அந்த காதல் முறிந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு