தேசிய செய்திகள்

கேரளா: அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட நாகப்பாம்பு குட்டிகளைப் பிடித்த தீயணைப்புத்துறையினர்

நாகப்பாம்பு குட்டிகளைப் பிடித்த தீயணைப்புத்துறையினர் அவற்றை பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள பெரிந்தல்மன்னா அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்ட்டில் நாகப்பாம்பு குட்டிகளைப் பார்த்த நோயாளிகள், அது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 10-க்கும் மேற்பட்ட நாகப்பாம்பு குட்டிகளைப் பிடித்தனர். பின்னர் அவைகளை சிறு குடுவைகளில் அடைத்து பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு