கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

'ஜி-20' தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நேரத்தில் சர்ச்சை ஆவண படமா? - கேரள கவர்னர் கேள்வி

இந்தியா ‘ஜி-20’ தலைமை பொறுப்பை ஏற்றுள்ள தருணத்தில் சர்ச்சை ஆவண படம் வெளிவந்திருப்பது கேள்வியை எழுப்புவதாக கேரள கவர்னர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

குஜராத் கலவரங்கள் தொடர்பாக, ' இந்தியா: மோடி மீதான கேள்வி' என்ற பெயரில் பி.பி.சி, எடுத்து வெளியிட்டுள்ள ஆவணப்படம் பற்றி கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுபற்றி நேற்று அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

நமது நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை விட, வெளிநாட்டு ஆவண பட தயாரிப்பாளரின், அதுவும் நமது காலனித்துவ ஆட்சியாளரின் கருத்துக்கு ஏன் மக்கள் இத்தனை முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பைத் தருகிறது.

இந்தியா ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள தருணத்தில் இந்தப் படம் வெளிவந்திருப்பது கேள்வியை எழுப்புகிறது. இந்த கசப்பான ஆவணப்படத்தை கொண்டு வர இந்த குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்தது ஏன்? நீங்கள் இவற்றை கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியாது; குறிப்பாக, அது நம்மை 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தவர்களிடம் இருந்து வந்துள்ளபோது புறக்கணித்து விட முடியாது என்று அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து