தேசிய செய்திகள்

துரோகம் செய்ததாக சந்தேகம்: வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன், மனைவியை அடித்துக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன், மனைவி துரோகம் செய்ததாக சந்தேகித்து அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

திருச்சூர்,

வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபர், மனைவி தனக்கு துரோகம் செய்ததாக சந்தேகித்து அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே விய்யூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (வயது 56) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8-ந்தேதி வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த உன்னிகிருஷ்ணனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன், 46 வயதான தனது மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு இன்று அதிகாலையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு விய்யூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு