கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

கேரளாவின் முதல் வந்தேபாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி.!

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி வருகிற 25ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

திருவனந்தபுரம்,

இந்தியா முழுவதும் அதிவேக வந்தே பாரத் ரெயில் சேவைகளை ரெயில்வே துறை அறிமுகம் செய்து வருகின்றனர். அதன்படி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூர் வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

8 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி வருகிற 25ந்தேதி தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து இரு நகரங்களுக்கும் இடையே வந்தேபாரத் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட ரெயில், எர்னாகுளம் வடக்கு ரெயில் நிலையத்தை வெற்றிகரமாக வந்துசேர்ந்தது.

SCROLL FOR NEXT