தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

2-ம் வகுப்பு மாணவியை பள்ளியின் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பெற்றோர்கள் அந்த பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கொல்கத்தா

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அந்த பள்ளியின் நடன ஆசிரியர் ஒருவர் 2 -வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். சிறுமியை ஆசிரியர் இதனை வெளியே கூறக்கூடாது என மிரட்டி உள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று காலை வெளியில் தெரிய வந்து உள்ளது. இதை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெற்றோரின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பள்ளியின் ஆசிரியரை கைது செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்