தேசிய செய்திகள்

சிக்கமகளூருவில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

சிக்கமகளூரு அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனியை சோந்தவர் குமா (வயது 50).தாழிலாளி. இவர் சக்கராயப்பட்டணா கிராமத்தில் உள்ள கென்சராயர் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

சக்கராயப்பட்டணா கிராமத்தில் உள்ள சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குமார் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு சக்கராயப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சக்கராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து