தேசிய செய்திகள்

சோனியாகாந்தியுடன் நிதிஷ்குமார், லாலு சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நிதிஷ்குமார், லாலு ஆகியோர் நேற்று நேரில் சந்தித்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அரியானாவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் டெல்லி சென்றார்.

அவரும், ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இல்லத்துக்கு ஒன்றாக சென்றனர். சோனியாகாந்தியை சந்தித்து பேசினர்.

பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் சோனியாகாந்தியை நிதிஷ்குமார் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக இந்த சந்திப்பு நடந்தது. காங்கிரசுக்கும், சில மாநில கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயற்சி நடந்து வரும் நிலையில், இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை