தேசிய செய்திகள்

41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் இருந்து வெளியேற எத்தனை மணி நேரம் ஆகும் - தேசிய பேரிடர் மேலாண்மை தகவல்

தொழிலாளர்களை மீட்பதற்காக 58 மீட்டர் வரை துளையிடும் பணி முடிந்துள்ளது.

தினத்தந்தி

உத்தர்காசி,

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்ற செய்தி அறிய ஒட்டு மொத்த தேசமும் ஆவலுடன் உள்ளது.

இந்தநிலையில், மீட்பு பணி குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அளித்துள்ள தகவலின்படி,

தேசிய பேரிடர் மீட்புப்படை மட்டுமின்றி ராணுவம், விமானப்படையை சேர்ந்த அதிகாரிகளும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களை மீட்பதற்காக 58 மீட்டர் வரை துளையிடும் பணி முடிந்துள்ளது. இன்னும் 2 மீட்டர் மீதமுள்ளது. சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேற 3-ல் இருந்து 5 நிமிடங்கள் வரை ஆகும். 41 பேரும் வெளியேற 3 - 4 மணி நேரங்கள் ஆகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்