தேசிய செய்திகள்

காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது; 6 மாதங்களில் தேர்தல் - அமித்ஷா

காஷ்மீரில் சட்டம் மற்றும் ஒழுங்கு மேம்பட்டுள்ளது எனவும் 6 மாதங்களில் தேர்தல் நடைபெறும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தினத்தந்தி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 3-ம் தேதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து பேசினார். பயங்கரவாதத்தை ஒழிக்க பயனுள்ள அதிகமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களின் உரிமைகள் அவர்களிடம் கொடுக்கவே நாங்கள் பணியாற்றுகிறோம். கடந்த ஒரு வருடத்தில் அதிகமான பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுள்ளது. அங்கு சட்டசபைத் தேர்தலை அடுத்த 6 மாத காலங்களில் நடத்தலாம், என கூறியுள்ளார் அமித்ஷா.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது