புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் நேற்று மாலை ஜந்தர் மந்தரில் அறப்போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் பிருந்தா கரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.